இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Heavy rain only for these 13 districts! Chennai Meteorological Department Warning!

இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! இன்று நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  சில … Read more

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி! அரசு நடத்தும் சிறப்பு முகாம்! மக்களே பயன்படுத்திகொள்ளுங்கள்!

The work of linking Aadhaar number with the voter list! A special camp run by the government! Take advantage people!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி! அரசு நடத்தும் சிறப்பு முகாம்! மக்களே பயன்படுத்திகொள்ளுங்கள்! இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் கடந்த 01-08-2022 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக, ஆதார் எண் இணைக்கும் பணியினை துரிதப்படுத்தும் பொருட்டு 04.09.2022 அன்று சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுயவிருப்பத்துடன் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைப்பதற்கு, பொதுமக்கள் வழக்கமாக … Read more

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்! 

Consultation meeting led by DSP Geetha at Periyakulam Police Station!

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்!  தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  வருகின்ற 31.8.2022 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  பல்வேறு அமைப்பினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உள்ள சூழலில் இன்று பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா   தலைமையில் காவல் ஆய்வாளர் மீனாட்சி முன்னிலையில் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளிடம்  விநாயகர் சதுர்த்தி … Read more

பன்னீர்செல்வத்தை சந்தித்த ஒன்றியச் செயலாளர்! சால்வை அணிவித்து மரியாதை!

Union Secretary met Panneerselvam! Respect by wearing a shawl!

பன்னீர்செல்வத்தை சந்தித்த ஒன்றியச் செயலாளர்! சால்வை அணிவித்து மரியாதை! பெரியகுளம் அருகே கைலாசபட்டி ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் ப.சுப்பிரமணியன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் OPS  அவர்களை சந்தித்து வந்துள்ளனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு  சொந்தமான பண்ணை வீட்டில்  திண்டுக்கல் மாவட்டம் அதிமுக வேடசந்தூர் ஒன்றிய செயலாளர்  ப.சுப்பிரமணி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து … Read more

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!

A special section for women and children! CM opens with video display!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, அரசு கண் மருத்துவமனையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, நலப்பிரிவில் மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற … Read more

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!  

Two consecutive days of heavy rain for these 14 districts? Announcement issued by Chennai Meteorological Department!

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது அனைத்து இடங்களிலும்  கனமழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் பிறகு இடியுடன் கூடிய மழை பொழிவு ஏற்படும்   எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா ,தென் தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்க கடல் … Read more

மாற்றுத்திறனாளிகள் தொடர் உதவித்தொகை பெற இதனை செய்யுங்கள்! தேனி ஆட்சியரின் வேண்டுகோள்!

Do this to get the Disability Continuation Scholarship! Honey collector's request!

மாற்றுத்திறனாளிகள் தொடர் உதவித்தொகை பெற இதனை செய்யுங்கள்! தேனி ஆட்சியரின் வேண்டுகோள்!  தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று பயனடைந்து வரும் பயனாளிகள் வாழ்நாள் சான்று பெற்று ஒப்படைத்திட தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் .க.வீ.முரளீதரன்., இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள். தேனி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 75% மற்றும் அதற்குமேல் கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியவர்கள் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள மற்றும் முதுகு தண்டுவடம்/பார்கின்சன்/தண்டுவட மரபு … Read more

கண்மாய்களில் முல்லை பெரியாறு தண்ணீரை நிரப்பக் கோரி பேரணி! 

Rally to fill Mullai Periyaru water in Kanmai!

கண்மாய்களில் முல்லை பெரியாறு தண்ணீரை நிரப்பக் கோரி பேரணி! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் முல்லை பெரியாறு தண்ணீரை நிரப்பக் கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பேரணி நடைபெற்றது.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .90 சதவிகிதம் பேர் விவசாயிகளாகவும் ,விவசாயக் கூலிகளாகவும் ,கால்நடை வளர்ப்பவர்களாகவும் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இங்குள்ள கண்மாய் ,குளம் ,ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் … Read more

இந்த 5 மாவட்டங்களுக்கு 23 மற்றும் 24 தேதிகளில் கன மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Heavy rain on 23 24 dates for these five districts! Announcement issued by Chennai Meteorological Department!

இந்த 5 மாவட்டங்களுக்கு 23 24 தேதிகளில் கன மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சென்னை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு , புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம்   கூறுகிறது. மேலும் வரும் 23 மற்றும் 24 போன்ற தேதிகளில் நீலகிரி ,கோவை,தேனி … Read more

 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா! தேனியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி விநியோகம்!

75th Independence Day Elixir Festival! Distribution of national flag to every house in Theni!

 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா! தேனியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி விநியோகம்! தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வீடுகள் தோறும் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவிற்கு தேசிய கொடியேற்ற கொடிகள் வழங்கப்பட்டது. தமிழக அரசு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75 வது சுதந்திர தினத்தை அமுதப் பெருவிழாவாக கொண்டாட அறிவுறுத்தி இருந்தது. இதனை அடுத்து இல்லங்கள் தோறும் தேசியக்கொடியினை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இதனை … Read more