வடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

வடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க். வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக கூறும் பார்க், வடகொரியாவில் இருந்து தமது 13-வது வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை சாப்பிட்டதாக கூறுகிறார். பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாக கூறும் பார்க், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அந்த சிறு வயதில் காண நேர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார். … Read more

பிரதமரின் உதவியாளர் திடீர் ராஜினாமா?

பிரதமரின் உதவியாளர் திடீர் ராஜினாமா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின்  உதவியாளர் பதவியை அசிம் சலீம் பஜ்வா நேற்று திடீரென ராஜினாமா செய்தார். ஆனாலும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அசிம் சலீம் பஜ்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘எனக்கு எதிராக வெட்கமின்றி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விளக்க நான் வெட்கப்படவில்லை. எனக்கு களங்கம் விளைவிப்பதற்காக இந்த குற்றச்சாட்டுகள் என்னை நோக்கி வீசப்பட்டுள்ளன,’’ என கூறினார்.

கைதிகளுக்கு வித்தியாசமான முறையில் தண்டனையா?

கைதிகளுக்கு வித்தியாசமான முறையில் தண்டனையா?

துபாய் போலீஸ் துறை சார்பில் துபாயில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜெயில் கைதிகள் பல வகையான குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் அங்குள்ள தண்டனை மற்றும் சீர்திருத்த மையத்தின் சார்பில் ஜெயில் கைதிகளுக்கு பல்வேறு கைத்தொழில்கள் கற்றுத்தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு மனதளவில் அவர்கள் தன்னம்பிக்கை அடைய பயனுள்ளதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஜெயில் தண்டனை முடிந்து வீடு திரும்பும் நிலையில் தங்களுக்கு என ஒரு கைத்தொழிலை … Read more

துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்படும் சேவை மையங்கள்

துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்படும் சேவை மையங்கள்

துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் வாடிக்கையாளர் சேவை மையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு சுய சேவை மையங்களாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இதில் அந்த வாடிக்கையாளர் சேவை மையங்களில் பயன்படுத்தப்படும் ‘ஸ்மார்ட்’ தொழில்நுட்பங்கள் மற்றும் எந்திரங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் அரசின் ‘அனைவருக்குமான நகரம்’ கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சேவைகளும் எளிமைப்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த … Read more

ஒரு மாநிலத்தையே கடத்த முயன்ற கும்பல்

ஒரு மாநிலத்தையே கடத்த முயன்ற கும்பல்

நைஜர் மாநிலத்தின் டுக்கு என்ற இடத்தில் வசித்து வரும் மக்களை துப்பாக்கி ஏந்திய கும்பல் கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது உள்ளூர் பாதுகாப்பு படையினர் அவர்களது திட்டத்தை முறியடித்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 17 பேரும், துப்பாக்கி ஏந்திய கும்பலைச் சேர்ந்த சிலரும் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்தில் ஏற்கனவே பெண்கள் மற்றும் போலீஸ்காரர் உள்பட ஐந்து சுட்டுக்கொலை செய்திருந்தனர். இந்த மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக வன்முறை அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வைத்துள்ள … Read more

ஜப்பானில் புயலால் மாயமான சரக்கு கப்பல்

ஜப்பானில் புயலால் மாயமான சரக்கு கப்பல்

‘தி கல்ப் லைவ்ஸ்டாக்-1’ என்ற சரக்கு கப்பல், 43 சிப்பந்திகளுடனும், சுமார் 6 ஆயிரம் கால்நடைகளுடனும், நியூசிலாந்து நாட்டில் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவில் உள்ள ஜிங்டாங் துறைமுகம் நோக்கி கடந்த 14-ந்தேதி புறப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் மேசாக் புயலுக்கு மத்தியில் கிழக்கு சீன கடலில் சென்று கொண்டிருந்தது. ஜப்பானில் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி-ஓஷிமா தீவுக்கு மேற்கே 185 கி.மீ. தொலைவில் வந்தபோது புயலில் சிக்கி மாயமானது. முன்னதாக இந்த கப்பலில் இருந்து ஜப்பான் கடலோர … Read more

அந்தமான் நிக்கோபரையும் மிரட்டும் கொரோனா

அந்தமான் நிக்கோபரையும் மிரட்டும் கொரோனா

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில்  அந்தமான் நிக்கோபார் தீவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்தமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 223 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை … Read more

இந்த வைரஸ் ஒன்றும் அவ்வளவு கொடியது அல்ல

இந்த வைரஸ் ஒன்றும் அவ்வளவு கொடியது அல்ல

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்று, மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல என சிங்கப்பூர் பிரதமர் லீ … Read more

இந்த இருநாடுகளுக்கும் உதவ தயாரா இருக்கிறேன் – டிரம்ப்

இந்த இருநாடுகளுக்கும் உதவ தயாரா இருக்கிறேன் - டிரம்ப்

இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த டிரம்ப், இல்லை என்று நம்புகிறேன். ஆனால்,  ஆனால் அவர்கள் (சீனா) நிச்சயமாக அதற்கு போகிறார்கள். நிறைய பேர் புரிந்துகொள்வதை விட அவர்கள் மிகவும் வலுவாக செல்கிறார்கள்” என்றார். இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், … Read more

கொலம்பியாவில் ஏழு லட்சத்தை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு

கொலம்பியாவில் ஏழு லட்சத்தை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் … Read more