டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

0
199
#image_title

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என ஹசன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது.

அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

author avatar
Savitha