காம ஆசையினால் செய்த செயல்! மகள்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

0
104
The act of lust! What a pity for the daughters!
The act of lust! What a pity for the daughters!

காம ஆசையினால் செய்த செயல்! மகள்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு நகரில் சூரத்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட காட்டிபள்ளா பகுதியை சேர்ந்தவர் பசவப்பா (பெயா் மாற்றப்பட்டுள்ளது). கூலி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, 16 மற்றும் 15 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று வருகின்றனா்.

அந்த சமயத்தில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தன் மகள்கள் மீது தன் காம எண்ணத்தை திணித்துள்ளார். மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில் இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருக்கும் தன் மகள்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அதாவது மனைவி வேலைக்கு சென்ற பின் தன் மகள்களை மிரட்டி தன் காம ஆசைக்கு அவர்களை பலி ஆக்கியுள்ளார். சொந்த மகள்கள் என்ற எண்ணம் கூட இல்லாமல் அவர்களை காம ஆசைக்கு இணங்க சொல்லி உள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் குடும்பத்துடன் தீர்த்து கட்டி விடுவதாக மிரட்டியும் உள்ளார்.

இதனால் பயந்த அவர்கள் வெளியில் யாரிடமும் சொல்லாததை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி மூன்று வருடங்களாக தன் ஆசைக்கு அவர்களை பயன்படுத்தி இன்பம் அடைந்துள்ளார்.

நாட்கள் ஆக ஆக பசவப்பாவின் தொந்தரவு அதிகரிக்கவே மகள்கள் என்ன செய்வதென்று தெரியாமல், தன் மாமாவிடம் விஷயத்தை கூறி உள்ளனர். இதை கேட்ட அந்த பெண்களின் மாமா அதிர்ந்து போய் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் மூலம் அந்த பசவப்பாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தி கேட்டு மகள்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே இப்படி செய்ததை மக்கள் ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்து போய் உள்ளனர்.