கள்ளகாதலை தொடர பெண் ஒருவர் செய்த கொடூர செயல்! மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
59
The cruel act committed by a woman to pursue fake love! Shock waiting for people!
The cruel act committed by a woman to pursue fake love! Shock waiting for people!

கள்ளகாதலை தொடர பெண் ஒருவர் செய்த கொடூர செயல்! மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

உலகம் எங்குதான் போகிறது என்று தெரியவில்லை.முன்பெல்லாம் ஆண்கள் செய்த எல்லாவற்றையும் தற்போது பெண்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று குடிப்பதில் இருந்து அனைத்தையும் தொடர்கின்றனர்.

ரெய்ஸ் ஷேக் என்ற நபர், மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் தனது மனைவி ஷாஹிதா ஷேக்குடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் வசித்து வந்த அதே பகுதியில், அமித் விஸ்வகர்மா என்ற நபரும் வசித்து வந்துள்ள நிலையில், ஷாஹிதாவிற்கு இவருக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இவர்களின் கள்ள உறவு குறித்து அந்த பெண்ணின் கணவர் ரெய்ஸுக்கு தெரிய வந்ததை அடுத்து, இந்த கள்ள உறவை கை விடுமாறு அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால் அந்த பெண்ணோ, இந்த விஷயத்தை, விஸ்வ கர்மாவிடம் சொல்ல அவனோ கணவனை தீர்த்துகட்ட சொல்லி உள்ளான்.அப்படி செய்வதனால் நாம் உறவை தொடரலாம் எனவும் கூறி உள்ளான்.

அந்த பெண்ணும், அவன் சொன்னபடியே கடந்த 11 நாட்களுக்கு முன் கணவர் தூங்கிய போது, காதலனை அழைத்து இருவரும் சேர்ந்து கொடூரமாக கழுதை நெறித்து கொன்று விட்டு உடலை என்ன செய்வதென்று யோசித்து, பின் சமையல் அறையில் புதைத்து விட்டனர்.

அது தெரியாமல் இருக்க புது டைல்ஸ் ஒட்டி விட்டனர்.தற்போது அந்த பெண் தன் கணவனை காணவில்லை என போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.வழக்கு பதிந்து விசாரித்த போலீசார் வீட்டிற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சமையல் அறையில் மட்டும் புது வேலை நடைபெற்றுள்ளதால், சந்தேகம் அடைந்து அந்த இடத்தை தோண்டியுள்ளனர்.அப்போது அங்கு புதைக்கப்பட்ட கணவரின் சடலம் கண்டு அதிர்ந்து போயினர்.

அதன்பின் அந்த பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவள் அனைத்தையும் தெரிவித்து உள்ளாள்.எனவே அந்த பெண்ணை கைது செய்து அவரது காதலனை தேடி வருகின்றனர்.