2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்!

0
90
The female doctor who gave life to the corona while administering the 2 dose vaccine!
The female doctor who gave life to the corona while administering the 2 dose vaccine!

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்!

வேலூர் அருகே அரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா. 47 வயதான இவர் வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதன் காரணமாக பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தோற்று உறுதியாகியது. இதனையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 43 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹேமலதாவின் உடல்நிலை திடீரென மோசமானது.

அதைத் தொடர்ந்து வேலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். உயிரிழந்த டாக்டர் ஹேமலதா கொரோனா தடுப்பு ஊசி இரண்டு டோசும் போட்டுள்ளார் என்றும், ஆனாலும் அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததாகவும், தொற்று பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனாவுக்கு அரசு பெண் மருத்துவர் தடுப்பூசி போட்டும் உயிரிழந்த சம்பவம், உடன் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மத்தியில்பேர்ரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹேமலதாவுக்கு டேவிட் என்ற கணவரும், ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.