தொட்டில் சேலையில் விளையாடிய பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்! பதறிய தாய்!

0
74
The girl who played in the cradle sari died tragically!
The girl who played in the cradle sari died tragically!

தொட்டில் சேலையில் விளையாடிய பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்! பதறிய தாய்!

தற்போது பள்ளிகள் நடை பெறாத காரணத்தினால் அனைத்து குழந்தைகளும் வீட்டிலேயே இருக்கின்றன. அவர்களுக்கும் பொழுது  போவதில்லை, பெற்றவர்களுக்கும் அவர்களை பார்ப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. முழுநேரமும் பிள்ளைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது என்றால் கொஞ்சம் சிரமமான வேலைதான். தற்போது உள்ள பிள்ளைகள் மிகுந்த ஆக்டிவாக இருக்கின்றனர்.

இதன் காரணமாக அவர்களை பார்ப்பதே மிகப்பெரும் சவாலாக பெற்றோர்களுக்கு முன் நிற்கிறது. தற்போது ஒரு ஊரில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி விளையாடும் போது ஏற்பட்ட விபரீதத்தின் காரணமாக உயிரிழந்தார் என்ற  விஷயம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நம்பியூர் அருகே குருமந்தூர் மேடு காளியம்மன் நகரைச் சேர்ந்தவர் திருவேங்கடம் என்பவர். இவர் குருமந்தூர் பகுதியில் ஸ்டூடியோ கடை ஒன்றை நடத்தி வருவதாக கூறினார். இவர்களுக்கு மகள் ஸ்ரீ வர்ஷினி மற்றும் மகன் விபிஷன் என்ற இரு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் குருமந்தூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

ஸ்ரீவர்ஷினி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருவேங்கடமும், விபீஷணனும் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் ஸ்ரீவர்ஷினியும் அவருடைய தாய் மட்டுமே இருந்துள்ளனர். இதை தொடர்ந்து மாலை நேரத்தில் விளையாடுவதற்காக வீட்டின் பின்புறமுள்ள அறையில் உத்திரத்தின் மூலம், கயிற்றில் தொட்டிலை கட்டி ஊஞ்சலாட ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீ வர்ஷினி. அப்போது எதிர்பாராதவிதமாக சேலை அவரது கழுத்தில் சுற்றியது. ஆனாலும்  மீண்டு வர நினைக்கும் போது சேலை கழுத்தை இறுக்கி அந்த குழந்தை மயக்கமாகி விட்டது.

இதை பார்த்த அவரது தாய் பதறி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக, கோபி அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு ஸ்ரீவர்ஷினியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்தக் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அதன் காரணமாக அவர்கள் மேலும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.