மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !..

0
161
The mother-in-law ran with the son-in-law!.. The daughter came to complain to the police in tears!..
The mother-in-law ran with the son-in-law!.. The daughter came to complain to the police in tears!..

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !..

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் தான்  கிருஷ்ண கோபால் தாஸ். இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த  ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ் அடிக்கடி பிரியங்கா தாஸிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

மேலும் அடித்து துன்புறுத்துவதும் போன்ற செயல்களின் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இவர்களின் பஞ்சாயத்து இரு குடும்பங்களிடையே பேசி தீர்க்கப்பட்டு கிருஷ்ண கோபால் தாஸ் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவரின் மனைவி வீட்டில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு பஞ்சாயத்தில் தீர்ப்பு வந்தது.

அதனால் வீட்டோடு மாப்பிள்ளையாக பிரியங்கா தாஸின் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார். சொந்த வீடிற்கு செல்லலாம் என்று மனைவி கூப்பிட்டாலும் வராமல் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.கிருஷ்ண கோபால் தாஸ் மனைவியின் தாய் ஷிபாலி தாஸ் என்பவரிடமே மறைமுகமாக தனது கள்ளக்காதலை துவங்கியுள்ளார்.

பிரியங்கா தாஸ் வீட்டில் இல்லாத சமயமாக பார்த்து  இருவரும் நெருங்கி பேசி பழகி வந்துள்ளனர். இந்த நெருக்கம்சில காலத்தில் காதலாக உருவானது. இந்த உறவு சுமார் 3 ஆண்டுகள் வரை சென்றுள்ளது. இருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பிரியங்கா தாஸ் திடீரென ஒருநாள் இவர்கள் இருவருக்கு இடையே உள்ள உறவை கண்டுபிடித்துவிட்டார். இதனால் குடும்பத்தில் வாக்குவாதம் முற்றி கலவரமாக மாறியது.

எனவே பிரியங்கா தாஸின் தாய் ஷிபானி தாஸ் தன் கள்ளகாதலனும் மருமகனுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக குடும்பம் நடத்த துவங்கிவிட்டார். மகளுக்கு துரோகம் செய்கிறோம் என்பதை தாண்டி கணவனை தவிக்க விட்டு சென்றார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பிரியங்கா தாஸ் தன் கணவனை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் அவரின் தந்தையுடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரே மருமகனை வீட்டை விட்டு வெளியேறி ஓடி குடும்பம் நடத்தி வந்த சம்பவம் தற்போது இணையத்தில் மிக அதிக வைரலா பரவி வருகிறது.

author avatar
Parthipan K