அரசியலுக்கு வர ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் இளைய தளபதி!! நாளை முக்கிய ஆலோசனை!!

0
30
The youngest general who is doing preparatory work to enter politics!! Important advice tomorrow!!
The youngest general who is doing preparatory work to enter politics!! Important advice tomorrow!!

அரசியலுக்கு வர ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் இளைய தளபதி!! நாளை முக்கிய ஆலோசனை!! 

நடிகர் விஜய் நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இளைய தளபதி என்று மக்களால் அழைக்கப்பட்டு தவிர்க்க முடியாத நடிகராக காலூன்றியவர் நடிகர் விஜய். அவர் தற்போது நடிப்பு தொழில் மட்டுமல்லாமல் சில பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது.

விஜய் அரசியலுக்கு வருவதாக வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அவரின் மக்கள் இயக்கம் மற்றும் அவரின் செயல்பாடுகள் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் தோற்றுவித்துள்ளது. மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் பொழுது விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின் பேரில் சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். அடுத்ததாக இப்தார் நிகழ்ச்சிகளையும் நடத்தினர். அதையடுத்து உலக பட்டினி  தினத்தில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம்  மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவை வழங்கினார்கள்.

  இதையடுத்து தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை விஜய்  சந்தித்து பரிசுகள் வழங்கி கௌரவித்தார் மேலும் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் பேசினார்.

ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என விஜய் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சூழ்நிலையில் 2025 ஆம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது மேலும் அடுத்த வருடம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கவனம் செலுத்த போவதில்லை என்றும் 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மாநாடு நடத்த உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில்  விஜய் பனையூர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.