அப்போ ஷவர்மா இப்போ பர்கர்!!! நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்டவருக்கு வயிற்றுப் போக்கு!!!

0
95
#image_title

அப்போ ஷவர்மா இப்போ பர்கர்!!! நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்டவருக்கு வயிற்றுப் போக்கு!!!

நாமக்கல் மாவட்டத்தில் ஜங்க் புட்ஸ் வகைகளில் ஒன்றான பர்கர் உணவை சாப்பிட்ட ஒரு நபருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூரில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கலையரசி அவர்கள் கடந்த செப்டம்பர் 16ம் தேதி ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர், சமையல்காரர்கள் இரண்டு பேர், கடைக்கு சிக்கன் விநியோகம் செய்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பர்கர் சாப்பிட்ட நபருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரின் 18 வயதான மகன் சஞ்சய் மற்றும் அவரது நண்பர் ராகுல் என்பவருடன் சேர்ந்து பர்கர் சாப்பிட முடிவு செய்தார். இதையடுத்து நாமக்கல்-சேலம் சாலையில் அமைந்துள்ள மிஸ்டர் பர்கர் என்ற கடைக்கு சென்றனர்.

சஞ்சய் மற்றும் ராகுல் இருவரும் சேர்ந்து அந்த கடையில் பர்கர் சாப்பிட்டனர். பின்னர் மறுநாள் காலையில் பர்கர் சாப்பிட்ட சஞ்சய்க்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெறுவதற்கு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர் சஞ்சையை அவரது பெற்றோர்கள் சேர்த்தனர்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர் சஞ்சைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பர்கர் சாப்பிட்டு மாணவர் சஞ்சய்க்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.