திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது!

0
63

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் மூன்று தினங்கள் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் நடைபெறும்.அந்தவிதத்தில் இந்த வருடத்திற்கான பவித்ரா உற்சவத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் சீதா கோதண்ட ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளிட்டோருக்கு திருமஞ்சனம் சாத்துமுறை, ஆஸ்தானம் நடைபெற்றது. அதனை அடுத்து இரவு பவித்ர பூர்ணாஹூதியுடன் வருடாந்திர பவித்ர நிறைவுபெற்றது.

உற்சவத்தில் கோவில் துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கா ராஜு, ஆகம பண்டிதர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சார்யா மற்றும் கோவில் கண்காணிப்பாளர் ரமேஷ் கோவில் ஆய்வாளர்கள் ஜெயக்குமார், முனிரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.