ஊரடங்கு நீட்டிப்பால் 10ம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

0
83

மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்தத் திட்டமிட்டிருந்தது தமிழக கல்வித துறை. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவடைந்திருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைத்தது தமிழக அரசு. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழ்நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது அரசு.

10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் குறித்த மாறுபட்ட செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. 10ம் வகுப்புக்கும் தேர்வு வைக்காமல் திருப்புதல் தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை அறிவிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படை கல்வித் தகுதியாக கருதப்படுவதால் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார்.

வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 4ம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 10ம் வகுப்பு பொது தேர்வை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்.

அதன் படி மாற்றியமைக்கப்பட அட்டவனை பின் வருமாறு:

ஜூன் 15 – தமிழ்
ஜூன் 17- ஆங்கிலம்
ஜூன் 19 – கணிதம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 24 – சமூக அறிவியல்

ஆகிய தேதிகள் தேர்வுகள் நடைபெறும் என அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K