தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு – வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு!

0
228

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு – வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அற்விக்கப்பட்டதையடுத்து, நாளை முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கும் என அறிவிக்கட்டுள்ளது.

இந்நிலையில்,கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும், மதுவாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.
40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
40 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 03.00 மணி முதல் 5 மணி வரை மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபாலியல் தொல்லை கொடுத்த காமெடி நடிகர் – உண்மையைப் போட்டுடைத்த நடிகை
Next articleஎலிகளின் அட்டகாசத்தால் சின்னா பின்னமாகிப் போன தேவி திரையரங்கம் – காணொளி இனைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here