தமிழக அரசே இது நியாயமா? ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைந்த தமிழக மின் வாரிய ஊழியர்கள் கொதித்தெழுந்த சீமான்!

0
112

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளது தமிழகத்திற்கு உண்டான மிகப்பெரிய அவமானமும் தலை குனிபமாகும் பல வருட காலமாக போராடியும் தமிழ்நாடு மின் மாறிய ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றி தராமல் ஏமாற்றி வரும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மின்வாரியத்தில் கடந்த 20 வருட காலமாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து பல வருட காலமாக போராடி வருகின்ற நிலையில் அவர்களுடைய கோரிக்கைகள் மிகமிக நியாயமானது என்பதை அறிந்து கொண்டு நாம் தமிழர் கட்சி அவர்களுடைய போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறது.

சென்ற 1997 ஆம் வருடம் முதல் முறையாக ஊதியமின்றி பத்தாயத்திற்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றன. தமிழக மின்வாரியத்தில் 20,000 மேற்பட்ட களப்பணி காலியிடங்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருக்கின்ற நிலையில், அந்த இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நியமனம் செய்யாமல் தமிழக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது ஏன் என்று கேள்வி எழுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மின் பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு, புதிய மின்மாற்றிகள் நிறுவுதல் மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் அதிக அளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் தான் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி கடினமான உடல் உழைப்பு பணிகளை மேற்கொள்ளும் போது அதிகமான மின் விபத்துகளிலும் சிக்கிக் கொள்கிறார்கள். தற்காலிக ஊழியர்கள் என்பதால் விபத்து காப்பீடும் இல்லாததால் சரியான இழப்பீடும் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

ஆனாலும் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் புயல் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தொடர்ந்து பல தினங்கள் ஓய்வின்றி உழைத்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் செய்து வருவது சிறிதும் நியாயமற்ற செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே இனிமேல் காலம் தாழ்த்தாமல் தங்களுடைய வாழ்வாதார மீட்சிக்காக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு 10,000 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்தவாறு ஒருநாள் ஊதியமாக 380 ரூபாயும் விழாக்கால ஊக்கத் தொகையையும் வழங்கிட வேண்டுமெனவும் முறையான விபத்து காப்பீடு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் சீமான்.