நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு!

0
80

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு!

நாளை மாலை 6 மணிக்கு முக்கிய அழைப்பை பாஜகவும் இந்து முன்னணி அமைப்பும் தமிழக மக்களுக்கு விடுத்துள்ளது.

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வந்த விமர்சனங்கள் பற்றிய சர்ச்சைகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதில் நமது புராணங்களையும், கந்தர் சஷ்டிக் கவசத்தையும் பற்றி தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்தனர்.

கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவர்கள், அதில் ஆபாச வார்த்தைகள் வருகின்றது எனவும், இது மாதிரியான ஆபாச வார்த்தைகள் வருமா? என்பதைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பி வந்தனர்.கந்த சஷ்டி கவசத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை படிக்கின்றனர்.எனவே அவர்களது கருத்துக்கள் மக்களைப் தவறான பாதைக்கு கொண்டு போய்ச் சென்று பாதிப்புக்கு உள்ளாக்கி சர்ச்சையைை ஏற்படுத்தியது.

கந்தர் சஷ்டி கவசத்தை பற்றி ஆபாசமாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டத்தின் யூடியூப் சேனல் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர் என குறிப்பிடத்தக்கது.

எனவே சஷ்டியை முன்னிட்டு அனைத்து தமிழக மக்களும் அவர்களது வீட்டில் மாலை 6 மணிக்கு விளக்கேற்ற வேண்டும் என பாஜகவும், இந்து அமைப்பினரும் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

author avatar
Kowsalya