இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்!

0
124
#image_title

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம். சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்.

இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்கள். இவருடைய மகன் பாவலர் சிவன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த இறப்புச் செய்தியை அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் பாவலர் சிவன். இவர் ஓரிரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாவலர் சிவன் பல ஆண்டுகளாக இளையராஜா அவர்களின் இசைக்குழுவில் கிதார் வாசிப்பாளராக இருந்துள்ளார்.

60 வயதாகும் பாவலர் சிவன் அவர்கள் புதுச்சேரியில் அவருடைய வீட்டில் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு இளையராஜா அவர்களின் குடும்பத்தினரின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாவலர் சிவன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இசையமைப்பாளர் தீனா அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் தீனா பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் “இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் கிதார் இசைக் கலைஞர் பாவலர் சிவராமன் அவர்கள் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பாவலர் சிவராமன் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
Savitha