தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி

0
274
TTV Dhinakaran
TTV Dhinakaran

தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி

தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது,

எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன.

மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது.

தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous articleமகள் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படம்! ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்வம்!
Next articleவடிவேலு காமெடி பாணியில் 7 வது திருமணம் செய்த பெண்! இறுதியில் நடந்த சுவாரசிய சம்பவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here