கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.

0
244

கனிமொழியின் மாமியாருக்கு இரங்கலா! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.

திமுகவின் இளைஞரணி கூட்டம் கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக இளைஞரணி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌ ‌‌‌

‌ ‌அதில் முக்கியமாக மறைந்த திமுக முன்னோடிகளான புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன்‌, அண்மையில் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் மாமியார் சுசிலா கோவிந்தசாமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தான், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சிக்காக ஆரம்ப காலம் முதல் பல தியாகங்களை செய்து கட்சியை வளர்த்து சுயநலம் பார்க்காமல் தனது வாழ்நாளை கழித்து உயிரிழந்த பல தொண்டர்கள் மற்றும் அடிமட்ட நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்காமல் தனது அத்தையின் மாமியார் என்ற காரணத்தால் இரங்கல் தெரிவித்துள்ளது திமுக உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ‌ ‌

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த திமுக நிர்வாகிகள் தற்போது உதயநிதி ஸ்டாலின் இந்த செயலில் ‌ஈடுபட்டது பல நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. திமுக ஒரு குடும்ப கட்சி என்று மக்களால் பெரிதும் பேசப்படுகிறது, கலைஞர், ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் என வரிசையாக திமுகவை ஆக்கிரமித்து கொண்டு இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் செயலை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்று உடன்பிறப்புகள் புலம்பி கொண்டு வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleஅமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான்
Next articleஅமைச்சர் செங்கோட்டையன் ஏன் இப்படிச் செய்தார்? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here