சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா

0
101
#image_title

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா

காஞ்சிபுரத்தில் தயா­ரிக்­கப்­பட்ட கண் மருந்தைப் பயன்­படுத்­திய அமெ­ரிக்­கர்­கள் பல­ருக்கு பார்வை இழப்பு உள்ளிட்ட பல்­வேறு வித­மான பாதிப்பு­கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்டு ஏற்­று­மதி செய்­யப்­படும் மருந்­து­க­ளின் தரம் தொடர்­பாக சில நாடு­கள் கேள்வி எழுப்பி வரு­கின்­றன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இரு இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்துது இந்திய சுகாதாரத் துறைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த குளோபல் பார்மா என்ற நிறுவனம் தயாரித்த கண்சொட்டு மருந்தால் பார்வை பறிபோயுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.

சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரித்த இந்த சொட்டு மருந்தினை அமெரிக்காவில் பயன்படுத்தி, 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேருக்கு கண்பார்வை பறிபோனதாகவும், 12 பேருக்கு தொற்றுபாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டினை அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த கண் சொட்டு மருந்தினை தொடர்ந்து பயன்படுத்தினால், தொற்று பாதிப்பு அதிகமாகும் என்றும் அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.

கண்­களில் செயற்­கை­யா­கக் கண்­ணீரை வர­வ­ழைப்­ப­தன் மூலம் விழித்­திரை காய்ந்து போகா­மல் இருக்க இந்த கண் மருந்து உத­வு­கிறது. எனி­னும் அசுத்­த­மான முறை­யில் தயா­ரிக்­கப்­பட்ட இந்த மருந்­தின் மூலம் அமெ­ரிக்­கா­வில் இது­வரை கண்­ட­றி­யப்­ப­டாத கிரு­மித்­தொற்று பல­ருக்கு ஏற்­பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அசுத்தமான தண்ணீரால் இந்த சொட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் குற்றஞ்சாட்டி உள்ளது.

எனவே, அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு குழுவானது, இந்த சொட்டு மருந்தினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த மருந்தைப் பயன்­ப­டுத்­தக் கூடாது என அமெ­ரிக்­கா­வில் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்டு, அங்கு விற்­ப­னை­யா­கா­மல் உள்ள கண் மருந்தை மொத்­த­மாக திரும்­பப் பெற்­றுக் கொள்­வ­தாக அதன் உற்­பத்­தி­யா­ள­ரான சென்னையை சேர்ந்த குளோ­பல் ஃபார்மா நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஃபார்மா நிறுவனத்தில் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனராக அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட கண் மருந்து சுத்­த­மற்ற முறை­யில் தயா­ரிக்­கப்­பட்­ட­தாக எழுந்­துள்ள புகாரைத் தமி­ழக மருந்து கட்­டுப்­பாட்டு இயக்­கு­ந­ர­கம் திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளது.

அந்­தக் கண் மருந்­தின் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டதாகவும் அதன் மூலம் அந்த மருந்­தில் எந்­த­வி­த­மான தொற்று ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கிரு­மியோ அல்­லது கண்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மாசு­களோ இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Savitha