எங்களின் குறிக்கோள்கள் தனித்தனி!- நயன்தாராவுடனான காதல் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்

0
81
Nayanthara-Vigneshsivan

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் திருமணம், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் தான்.

நயன்தாரா 2005 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தனது நடிப்பு திறமையால் ஆட்சி செய்து கொண்டு இருப்பவர். ரசிகர்களால் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படுபவர்.

வழக்கமான கதாநாயகிகளை போல் இல்லாமல் தனக்கான அங்கீகாரத்தையூம், அடையாளத்தையும் உருவாக்கி கொண்டவர்.

கதாநாயகர்களுக்கு ஈடாக ஏன் அவர்களை விட அதிகமாகவே சம்பளத்தையும், வசூலையும் கொண்டவர்.

‘போடா போடி’ திரைப்படம் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படம். அதன் பிறகு பாடல் ஆசிரியராகவும் பரிமாணமானவர் தான் இவர். விஜய்சேதுபதி-நயன்தாரா நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘நானும் ரவுடி தான்’ இது இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல் நயன்தாராவுடனான காதலையும் கொடுத்தது.

கோலிவுட்டின் காதல் பறவைகளாக இருவரும் சிறகடித்து வருகின்றனர்.

இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் உங்கள் இருவரது திருமணம் எப்போது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு விக்னேஷ் சிவன் “எங்களுக்குள் காதல் தற்போது நன்றாக சென்றுகொண்டிருக்கிறது, மேலும் எங்களுக்கென்று தனி குறிக்கோள்கள் இருக்கின்றது. அதை கூடிய விரைவில் அடைந்துவிட்டு திருமணம் செய்துகொள்வோம்” என பதில் அளித்தார்.

author avatar
Parthipan K