இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்!

0
63
Want to talk to teens on video? Then you have to do this!
Want to talk to teens on video? Then you have to do this!

இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்!

கொரோனாவின் காரணமாக உலகம் முழுவதும் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதன் மூலம் மக்கள் பொழுது போக்காக மொபைல் போனை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில் நமக்கு எதிராக தகவல் தொழில்நுட்பங்களும் செயல்பட தொடங்கி உள்ளன.

ஆன்லைன் மோசடி தொடங்கி பல சிக்கல்களில் பலர் சிக்கியுள்ளனர்.அதிலும் குறிப்பாக ஆண்களும், பதின் பருவ மாணவர்களும் தான்.பெற்றோர் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி கொடுக்கும் செல்போனில் பலர் தன் வாழ்வையே இழந்து வருகின்றனர்.

இந்த சந்தர்பத்தை மோசடியாளர்கள் தனக்கு சாதகமாக மாற்றி கொண்டு உள்ளனர்.இளசுகளின் பலவீனத்தில் அந்த மோசடியாளர்கள் பணம் பார்த்துள்ள விஷயம் அறிந்து சைபர் க்ரைமே அதிர்ச்சியடைந்துள்ளது.

சேவல் என்ற வாட்ஸ்அப் குரூப் தொடங்கி அந்த லிங்க்கை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எண்ணுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த க்ரூப்பில் இணைந்தால் இளம்பெண்களிடம் உல்லாசமாக வீடியோ காலில் பேசலாம் என்று கூடவே ஒரு ஆடியோ பதிவும் பகிரப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில், இந்த லிங்கை 15 பேருக்கு அனுப்பினால், அவர்களுக்கு பெண்களுடன் 15 நிமிடம் வரை இலவசமாக வீடியோ கால் பேச சலுகை தரப்படும்.

மேலும், ஆபாசமாக பேசிக்கொள்ள 1 மணி நேரத்துக்கு 500 ரூபாய், ஆடையின்றி ஒரு மணி நேரம் பேச 700 என்றும் 1 மாதம் முழுவதும் இந்த சலுகையை பெற 3 ஆயிரம் ருபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அந்த க்ரூப்பில் முதலில் 10 பேர் சேர்ந்த பிறகு, சில இளம்பெண்களை புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. க்ரூப்பில் உள்ளவர்கள் தாங்கள் விரும்பும் பெண்களை தேர்வு செய்துகொண்ட பின்னர் அட்மின்களின் எண்ணிற்கு ஆன்லைனில் பணத்தை செலுத்த வேண்டும்.

பணத்தை செலுத்திய பின்னர் அவர்கள் விரும்பிய பெண்ணின் ஐடி தரப்படும் என்பதே ”சேவல்” க்ரூப் அட்மின்களின் திட்டம். இதை நம்பிய பல பேர் அட்மின்களின் எண்ணிற்கு 500 முதல் 3 ஆயிரம் வரை செலுத்தியுள்ளனர்.

அவர்கள் பணத்தை செலுத்தியவுடன் க்ரூப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் நீக்கும் வரை நாம் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் என்ற விசயமே தெரியாமல், தூண்டிலில் சிக்கிய மீனாக வாலிபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஆனால் இப்படி ஏமாற்றியதாக யாருமே புகார் கொடுக்க முன்வராத நிலையில், இணையத்தில் இதை பதிவிட்டு புலம்பி கொண்டு உள்ளனர்.