எங்கோ இருந்த கோபத்தை மாணவன் மீது காட்டிய தலைமை ஆசிரியர் துடியாய் துடித்த மாணவன்! பதறிப்போன தாயார் செய்த காரியம்!

0
62

ரெட்டியார்சத்திரம் அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் சசிகுமார் சசிகுமார் புதுக்கோட்டையில் இருக்கின்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், கணினி வகுப்பின் போது ஆசிரியர் வராததால் காரணமாக, விளையாடுவதற்கு செல்ல தலைமையாசிரியர் லட்சுமணனிடம் அனுமதி கேட்க அவர் சென்றிருந்தபோது கை பேசியில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் லட்சுமணன் சிறிது நேரம் சென்ற பிறகு மாணவன் சசிகுமாரிடம் விபரம் கேட்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் மாணவன் சசிகுமார் விளையாட செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே கைப்பேசியில் வாக்குவாதம் செய்து விட்டு கடும் கோபத்திலிருந்த தலைமையாசிரியர் லட்சுமணன் அந்த கோபத்தை மாணவன் சசிக்குமாரின் மீது காட்டியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

மாணவனை பிரம்பால் 2 கைகள் மற்றும் முதுகு என்று பல இடங்களில் அடித்திருக்கிறார் லட்சுமணன். மயக்கமடைந்த மாணவன் அங்கேயே விழுந்துவிட அதன்பிறகு அவரை மற்ற மாணவர்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்.

வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய சசிகுமாரின் தாயார் மகன் இருந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் காரணமாக, அவர் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தன்னுடைய மகனை சேர்த்தார்.

அதோடு இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் லட்சுமணன் மாணவனை அடித்ததாக புகார் வழங்கியிருக்கிறார். ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய காவல் துறையினர் ஆசிரியர் லட்சுமணனை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.