ரோஜா வா வீட்டுக்கு போலாம்!! வர மறுத்ததால் கணவன் செய்த செயல்!!

0
76

திருவள்ளூர் அருகே தன் மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் கணவன் காட்டுப் பகுதிக்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கீளப்பூடி என்ற காலனியில் வாழ்ந்து வருபவர் வேலு. இவருக்கு வயது 27. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே அப்பகுதியை சேர்ந்த ரோஜா என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

நன்றாக போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் குடிப்பழக்கம் வந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு ரோஜாவிடம் தகராறு செய்துள்ளார். தினமும் மது அருந்துவிட்டு ரோஜாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

 

அவரது மனைவி ரோஜா கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார். மனைவியை பிரிந்த அவரால் இருக்க முடியவில்லை. மனைவியை பிரிந்த சோகம் தாளாமல் இருந்த வேலு மனைவியின் வீட்டிற்குச் சென்று மறுபடியும் சேர்ந்து வாழ அழைத்துள்ளார்.

 

ரோஜா வேலுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். இதனால் மிகவும் மனம் உடைந்து போன மேலும் காட்டு பகுதிக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வேலுவின் தந்தை பெரியப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

author avatar
Kowsalya