பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!!

0
29
#image_title

பிரபல நடிகரின் கார் மோதி பெண் உயிரிழப்பு!!! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!!

பிரபல நடிகர் ஒருவரின் கார் மீதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த நடிகரை அதிரடியாக கைது செய்தனர்.

கன்னட மொழியில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறியவர் நடிகர் நாகபூஷனா அவர்கள். ஆவர். நடிகர் நாகபூஷனா என்று அழைக்கப்படும் நாகபூஷன் எஸ்.எஸ் அவர்கள் காமெடி வேடங்களில் நடித்து பிரபல நடிகராக உயரிந்துள்ளார். இவர்தான் தற்பொழுது காரை தாறு மாறாக ஓட்டி பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி இரவு நேரத்தில் நடிகர் நாகபூஷனா அவர்கள் உத்தரஹள்ளி பகுதியில் இருந்து கொனனகுண்டே பகுதியை நோக்கி காரில் வேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பிரேமா, கிருஷ்ணா தம்பதி மீது மோதியது.

அதன் பிறகு வசந்தபுரா சாலையில் இருந்த மின்சார கம்பி மீது மோதியது. இதில் நடிகர் நாகபூஷனா அவர்களின் கார் பிரேமா மற்றும் கிருஷ்ணா தம்பதி மீது வேகமாக மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது பிரேமா வழியிலேயே உயிரிழந்தார். பிரேமாவின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அலட்சியமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் நாகபூஷனா அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து நடிகர் நாகபூஷனா அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் நாகபூஷனா அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு வெளியான சங்கஷ்டகர கணபதி என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். இவர். நடித்த இக்கத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.