ஆன்லைன் மூலம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட நபருக்கு நேர்ந்த சோகம்..!

0
142

பத்தாயிரம் பணம் கொடுக்கவில்லை என பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விடுவதாக பெண் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வரும் நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் கால் கேர்ல்ஸ் தேடியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு பெண்ணின் எண் கிடைத்துள்ளது. அவரிடம் பேசிய அந்த பெண் ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். தனது நண்பர்களுடன் வந்த அந்த பெண் காரில் அமர சொல்லியுள்ளார்.

அதன்பெண் அவரிடம் 25000 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட அந்த நபர் ஆன்லைன் மூலம் பணத்தையும் அனுப்பியுள்ளார். அவர் பணம் அனுப்பியதும் காரில் இருந்த மற்ற நபர்கள் அவரை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.மேலும், பத்தாயிரம் பணம் தரவில்லை எனில் அவரை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

ஆனால், அந்த நபர் அதற்கு மறுத்துள்ளார்.இதனை அடுத்து, அவரை காரில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். இதனை அடுத்து, அந்த நபர் ஜனவரி7ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு பணத்தை இழந்த சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.