நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்!

0
82
Work done by a government employee for four years! The act done by Patariya Thai!
Work done by a government employee for four years! The act done by Patariya Thai!

நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்!

ஒரு விஷயம் வெளி வந்தால் தான் அனைவரும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பிக்கின்றனர். பெரிய பெரிய பள்ளிகளில் சொல்லப்பட்ட பாலியல் புகாரை தொடர்ந்து தற்போது வேறு சில இடங்களில் நடைப்பெற்ற விஷயங்கள் கூட வெளிவர தொடங்கி உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் 32 வயதான ராஜா என்ற நபர். ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில், 2016ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர், 8ம் வகுப்பு படித்து கொண்டிருந்த மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

மாணவி தன்னுடன் நெருங்கி பழகுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், பள்ளியில் வைத்து அந்த மாணவியை பாலியல் ரீதியாக பல முறை துன்புறுத்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து ஆசிரியரான ராஜா குரூப்-4 தேர்விலும் தேர்ச்சி பெற்று, திருவாரூர் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பணியில் சேர்ந்து 4 ஆண்டு காலமாக திருவாரூர் மாவட்டத்திலேயே அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

அரசு பணியில் சேர்ந்த பிறகும் கூட ராஜா தொடர்ந்து மாணவியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஆனால், தற்போதைய கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்துள்ள சிறுமி பள்ளி ஆசிரியரான ராஜாவிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது குறித்து எப்படியோ சிறுமியின் தாய்க்க்கு தெரிய வரவே, அதிர்ந்து போனார்.

அதன் பின் அவர் சிறிதும் யோசிக்காமல் . இந்த விஷயத்தை பற்றி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆரணி மகளிர் காவல் நிலைய போலீசாருக்கும் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் முன்னாள் ஆசிரியரான ராஜா மீது ஆரணி மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்து கொண்ட ஆசிரியர் ராஜா தலைமறைவாகி உள்ளதால் அவரை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.