சோமாலியாவில் குண்டுவெடிப்பு

சோமாலியாவில் குண்டுவெடிப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப் படைகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.இந்த குண்டு வெடிப்பில் ராணுவ தளத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 8 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 14 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல்-கொய்தாவுடன் … Read more

லெபனான் அதிபர் அதிரடி கருத்து

லெபனான் அதிபர் அதிரடி கருத்து

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஒளிவு மறைவில்லாமல் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று லெபனான் நாட்டின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவுன் சர்வதேச விசாரணை அழைப்புகளை நிராகரித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில் பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு உடன்பாடில்லை” என கூறினார்.

இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் - உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். இதனால் உலகம் முழுவதும்  இதன் பாதிப்பு  அதிகமானது. தற்போது உலகம் முழுவதும் வைரசால் மிரண்டுள்ளது. கொரோனா வைரசை விரட்டுவதற்கு உலகம் முழுவதும் போராடி வருகிறது. இந்நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோசு அதானோம் காணொலி காட்சி மூலம் பேசியுள்ளார். … Read more

புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்

புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்

பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளைய தினம் புதிய பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார். மகிந்த ராஜபக்சே களனி விகாரையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார். இதனையடுத்து கண்டி தலதா மாளிகையில் எதிர்வரும் 14 ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம்

35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது. விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் … Read more

நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் பெண்ணின் வயிறு

நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் பெண்ணின் வயிறு

ஹுவாங் குவாக்சியன் (38), சீனாவை சேர்ந்தவர்  இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய  முன் சாதாரணமாகத்தான் இருந்தார் . ஆனால், அதற்குப்பின் திடீரென அவரது வயிறு வீங்க ஆரம்பித்தது. இன்னும் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் அந்த வயிறு மட்டுமே சுமார் 20 கிலோ எடை இருக்கிறது. படுத்துத் தூங்கக் கூட முடியாத ஹுவாங் மருத்துவர்களிடம் சென்றபோது, அவர்களாலும் அவரது வயிறு வீங்கிக்கொண்டே செல்வதற்கான காரணத்தை கண்டுபிடிக முடியவில்லை. சிகிச்சைக்கு 3,290 பவுண்டுகள் தேவைப்படும் என மருத்துவமனை கூறியுள்ளதால், தனக்கு உதவுமாறு ஹுவாங் மக்களுக்கு வேண்டுகோள் … Read more

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்!

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்!

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்! மனித உடலில் இருந்து வரும் வியர்வை மூலமாக கொரோனா தொற்றை கண்டறியும் பணியில் மோப்ப நாய்களை துபாய் விமான நிலையத்தில் நிற்க வைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமான போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதையும் அறிந்த பின்னரே விமானங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளுக்கு சளி மற்றும் வியர்வை … Read more

அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம்

அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம்

உலகின் வேறெந்த நாட்டையும் விட அந்த நாடு அதிகளவு பாதிப்பை கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி அமெரிக்காவை பாடாய்ப்படுத்துகிறது.  நேற்று மதிய நிலவரப்படி அங்கு கொரோனா பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 104 என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தகவல் சொல்கிறது. வெள்ளை மாளிகையின் எபோலா வைரஸ் தடுப்பு நிபுணராக இருந்த ராப் கிளெயின் கருத்து தெரிவித்துள்ளார். பூமியில் மிக மோசமான இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா … Read more

வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உலகையே உலுக்கிய இந்த வெடி விபத்தில் 100 பேர் பலியானதாகவும் 4,000 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 149 ஆக அதிகரித்திருக்கிறது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் லெபனான் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில்  பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கப்பட … Read more

45 நாளில் நடைமுறைக்கு வரும் – டிரம்ப்

45 நாளில் நடைமுறைக்கு வரும் - டிரம்ப்

டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை உறுதி செய்தது.இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது என்று கூறினார்.