சீனாவிலிருந்து வரும் மாணவர்களைக் குறிவைத்து கடத்தல் மோசடி

சீனாவிலிருந்து வரும் மாணவர்களைக் குறிவைத்து கடத்தல் மோசடி

ஆஸ்திரேலியாவில் மோசடிக்காரர்கள் சீனாவிலிருந்து வரும் மாணவர்களைக் குறிவைத்து கடத்தல் மோசடியில் சிக்கவைக்கின்றனர். அதில் சிக்கும் மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பெருமளவில் பிணைத்தொகை அளிக்கவேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளனர். பல சம்பவங்களில் மிரட்டப்பட்ட மாணவர்கள் தாங்கள் கடத்தப்பட்டதைப் போன்று போலியாக ஒளிப்பதிவுசெய்து சீனாவிலுள்ள குடும்பத்தினருக்கு அனுப்பிப் பணம்பெறவேண்டிக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு 8 சம்பவங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. அவற்றில் ஒன்றில் மீட்புத் தொகையாக சுமார் 2 மில்லியன் டாலர் அளிக்கப்பட்டது. பொதுவாக அந்த மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி … Read more

ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது

ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது

2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த, கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் 2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த இதற்கு முன்னர் விருப்பம் தெரிவித்துள்ளன. வட-தென் கொரியாக்கள் இணைந்து ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கலாம் என்ற ஊகமும் நிலவுகிறது.   கத்தார், 2016, 2020 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்தும் போட்டியில் பங்கேற்று, இரண்டு முறையும் அதன் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதில் தனக்கு நல்ல அனுபவமும் … Read more

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் வீரியம் அதிகரித்து வருகிறது. இதனால் இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.  வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன.  இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது. தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை … Read more

நாளை மறுநாள் முதல் உணவகங்களில் உணவு உண்பதற்கும் தடை

நாளை மறுநாள் முதல் உணவகங்களில் உணவு உண்பதற்கும் தடை

ஹாங்காங்கில் COVID-19 நோய்ப்பரவல் காரணமாக இரண்டு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 22 ஆம் தேதியிலிருந்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் முதன்முறை மக்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புதன்கிழமையிலிருந்து புதிய விதி நடப்புக்கு வரும். மக்கள் முகக்கவசம் அணியாததே ஹாங்காங்கில் நோய்ப்பரவல் மோசமடையக் காரணம் என்று சுகாதார அமைச்சர் சோஃபியா சான்  கூறியிருந்தார். ஹாங்காங்கிற்கு இது முக்கிய … Read more

சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

மலேசியாவில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் தற்காலிகமாக அகற்றப்படும் என்றும் அதன் மூலம் உள்நாட்டு பயணங்கள் எளிமையாக இருக்கும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். இருப்பினும், COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் விதிகளைப் பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெருநாள் கொண்டாட்டத்தின் போது வீட்டில் விருந்தினர்கள் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் … Read more

கொரோனா நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் கணிக்க முடியவில்லை – விஞ்ஞானிகள்

கொரோனா நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் கணிக்க முடியவில்லை - விஞ்ஞானிகள்

இந்தோனேசியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டியுள்ளது.  நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் என்பதைக் கணிக்க முடியாமல் இந்தோனேசிய விஞ்ஞானிகள் திணறுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 1,525 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது, இந்தோனேசியாவில் 100,303 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 4,838ஆக உள்ளது. 58,173 பேர் உடல்நலம் தேறியுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 45 விழுக்காட்டினர் கிழக்கு ஜாவா, தலைநகர் ஜக்கர்த்தா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். அந்த இரண்டு … Read more

உலகில் மிக அதிகமாகக் கண்காணிக்கப்படும் நகரங்களில் சீனா முதலிடம்

உலகில் மிக அதிகமாகக் கண்காணிக்கப்படும் நகரங்களில் சீனா முதலிடம்

உலகில் மிக அதிகமாகக் கண்காணிக்கப்படும் 20 நகரங்களில் 18 சீனாவைச் சேர்ந்தவை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் தொழில்நுட்ப இணையப்பக்கம் Comparitech அந்த ஆய்வை நடத்தியது. ஒரு நகரத்தில் அதிக அளவு கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பதால் அங்கு குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்வதற்குச் சான்றுகள் இல்லை என்று விளக்கியது. 2017இல் சீனாவின் தேசிய கண்காணிப்புக் கேமரா கட்டமைப்பில் சுமார் 20 மில்லியன் கேமராக்கள் இயங்கி வந்ததாகக் கூறப்பட்டது, இவ்வாண்டு அந்த … Read more

பிரான்ஸ்லிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானம் : இந்தியாவை வந்தடையும் நாள்?

பிரான்ஸ்லிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானம் : இந்தியாவை வந்தடையும் நாள்?

இந்தியா பிரான்ஸ் மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானம்  தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்க தொடங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்கள் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. அருண் ஜெட்லி பாதுகாப்பு படை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டு  பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தில் கையெழுத்திட்டார். இந்த விமானத்தின் விலை அதிகமாகவும், இதனால் பல ஊழல் நடந்திருப்பதாக பல தரப்பு வாதம் எழுந்துள்ள நிலையில்  இருந்தன. இதற்கான சர்ச்சையும் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி … Read more

தூதரகத்திலிருந்து வெளியேறும் அமெரிக்கர்கள்

தூதரகத்திலிருந்து வெளியேறும் அமெரிக்கர்கள்

சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக ஊழியர்கள், வளாகத்தைவிட்டு வெளியேற மும்முரமாய்த் தயாராகி வருகின்றனர். சீன நேரப்படி இன்று காலை 10 மணிக்கெல்லாம் அதிகாரிகள் வளாகத்தைக் காலி செய்தாகவேண்டும். காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் பெரிய வாகனங்கள் துணைத் தூதரகத்திற்குள் சென்று வந்த வண்ணம் உள்ளன. டெக்சஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனா அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடுகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ,இடையிலான உறவில் … Read more

கிடு கிடுவென உயரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

கிடு கிடுவென உயரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

நாடுமுழுவதும் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மற்றும் சில நிறுவனங்கள் மூடியுள்ளனர். பொருளாதாரம் குறைந்து வரும் நிலையில் , நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றன.சர்வதேச அளவில் தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடு அதிகரித்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கடை ஊழியர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக திருமணம் உள்ளிட்ட எந்தவித சுப நிகழ்ச்சிகளும் எளிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.தங்கத்தின் இறக்குமதி குறைவாக இருப்பதால், வர்த்தக வரலாற்றில் இல்லாத … Read more