காய்கனிகளை மட்டும் உணவாக சாப்பிட்டு வந்த பெண்… 5 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு…

0
45
காய்கனிகளை மட்டும் உணவாக சாப்பிட்டு வந்த பெண்… 5 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு…
தொடர்ந்து 5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்த ரஷ்யாவை சேர்ந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா நாட்டை சேர்ந்த 39 வயதான ஹனா சம்சனோவா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளாக பச்சை காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்தார். இவரை வீஹன் அதாவது பச்சை காய்கறிகளை சாப்பிடும் நபர் என்று குறிப்பிடுவர். இவர் பச்சை காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட்டும், ஜூஸாகவும் செய்து சாப்பிட்டு வந்தார்.
உலகத்தில் இருக்கும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஹனா சம்சனோவா அவர்கள் அந்தந்த நாடுகளில் கிடைக்கும் பழங்களையும் காய்கறிகளையும் உண்பது வழக்கம். அது மட்டுமில்லாமல் அவர் சாப்பிடும் பழங்கள் காய்கறிகளின் பலன்களையும் அவருடயை இன்ஸ்டாகிராம் பக்கத்தால் பதிவிடுவது வழக்கம். காய்கள், பழங்கள், இலைகள், பயிறு போன்ற இயற்கை உணவுகளை பச்சையாக சாப்பிடுவது ஹனாவின் வழக்கமாக உள்ளது.
இதேயடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹனா சம்சனோவா அவர்கள் அவருடைய உணவு பழக்க வழக்கங்களில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததால் அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் ஹனா சம்சனோவா அவர்கள்உடல் மெலிந்த நிலைக்கு தள்ளப்பட்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஹனா சம்சனோவா அவர்கள் பட்டினி மற்றும் சோர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஹனா சம்சனோவா அவர்களின் மறைவு குறித்து அவரது தாய் “பட்டினி மற்றும் சோர்வு காரணமாக மட்டுமே ஹனா சம்சனோவா அவர்கள் உயிரிழக்கவில்லை. காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டதால் ஹனா சம்சனோவா அவர்களின் உடல் ஒத்துழைக்காமல் உயிரிழந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த தனது மகள் ஹனா சம்சனோவா அவர்களின் உடலை இரஷ்யாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை அரசுக்கு  வைத்துள்ளார்.
ஹனா சம்சனோவா அவர்கள் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய்லாந்து நாட்டின் பழ சீசனுக்காக ஆர்வமாக இருக்கிறேன். உடல் எடையை அதிகரிக்க நேரம் வந்துவிட்டது” என்று பதிவிட்டுருந்தார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.