ஆழ்கடலில் 2.5 நிமிடம் சைக்கிள் ஓட்டி சென்னையை சேர்ந்த நபர் சாதனை!

0
72

நேற்று உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சென்னையை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் ஒருவர் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

சென்னையில் உள்ள நீலாங்கரை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் ஆழ்கடலில் சைக்கிள் போட்டி நேற்று சாதனை புரிந்தார்.

அமெரிக்காவில் பணிபுரியும் போலந்து சமூக விஞ்ஞானி பேராசிரியர் லெஸ்ஸெக் சிபில்ஸ்கி, உலக சைக்கிள் தினத்திற்கான ஐ.நா. தீர்மானத்தை ஊக்குவிப்பதற்காக தனது சமூகவியல் வகுப்போடு ஒரு அடிமட்ட பிரச்சாரத்தை நடத்தினார், இறுதியில் துர்க்மெனிஸ்தான் மற்றும் 56 பிற நாடுகளின் ஆதரவைப் பெற்றது. அசல் ஐ.நா. ப்ளூ அண்ட் வைட் ,ஜூன் 3 வேர்ல்ட் பைசைக்கிள் லோகோ ஐசக் ஃபெல்ட் வடிவமைத்தார், அதனுடன் அனிமேஷன் பேராசிரியர் ஜான் ஈ. ஸ்வான்சன் செய்தார். இது உலகம் முழுவதும் சவாரி செய்யும் பல்வேறு வகையான சைக்கிள் ஓட்டுநர்களை சித்தரிக்கிறது என கூறப்படுகிறது. லோகோவின் கீழே ஜூன் 3 வேர்ல்ட் பைசைக்கிள் டே என்ற ஹேஷ்டேக் உள்ளது. முக்கிய செய்தி என்னவென்றால், சைக்கிள் மனிதர்களுக்கு சேவை செய்கிறது என்பதைக் குறிக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மூன்றாம் தேதி அனுசரிக்கப்படும் உலக சைக்கிள் தினத்தில் அரவிந்து ஆழ்கடல் பயிற்சியாளர் செய்த சாதனை பேசப்பட்டு வருகிறது.

நீங்களே கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் 55 அடி ஆழத்தில் சைக்கிள் ஓட்டி உள்ளார். பொதுவாக ஆழ்கடலுக்கு செல்வோர்கள் சுவாச பிரச்சனை ஏற்படுவதற்கு சுவாச உபகரணங்களை பயன்படுத்துவார்கள் ஆனால் இவர் எந்த ஒரு உபகரணத்தை எடுத்துக் கொள்ளாமல் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

மூச்சைப் பிடித்து சைக்கிளில் ஆழ்கடல் சென்றவர் பாறை மற்றும் மணல் பரப்பு இடையே இரண்டு நிமிடம் சைக்கிள் ஓட்டியுள்ளார்.

இவரிடம் எடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, சிறு வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டும் பழக்கமுடையவன் நான். அதோடு மட்டுமில்லாமல் 16 ஆண்டுகளாக ஆழ்கடலில் பயிற்சி அளித்து வருகிறேன்.என்னிடம் பயிற்சி எடுத்த ஒரு மாணவர் ஒரு ஐடி ஊழியர் பிப்ரவரி மாதம் ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டார். மேலும் அதன் பின் ஆழ்கடலில் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆழ்கடலில் உள்ள குப்பைகளை அகற்றுவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளதாக தெரிவித்தார். தான் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும் போதும் கடலோர பாதுகாப்பு படையினர் அனுமதி பெற்றுதான் இறங்குவேன் என்று தெரிவித்தார். மேலும் கடல் வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடத்தி வருவதாக கூறினார்.