50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

0
65
Companies no longer run with 50% employees! New announcement issued by the state government!
Companies no longer run with 50% employees! New announcement issued by the state government!

50% ஊழியர்களுடன் இனி நிறுவனங்கள் இயங்கும்! மாநில அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு மக்கள் நலன் கருத்தி ஊரடங்கை அமல்படுத்தினர்.அதன் பலனாக கொரோனா பரவலானது சற்று குறைய ஆரம்பித்தது.அதனையடுத்து மக்கள் வெளியே செல்லவே கொரோனாவின் 2 வது அலையானது கோரதாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது.மக்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருக்க அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.கொரோனா தொற்றின் ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதித்துள்ளனர்.அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல செயல்படாகளை அமல்படுத்தினாலும் அது மக்களுக்கு போதுமானதாக இல்லை.

மக்கள் நலனுக்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது கேரளாவில் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.அதனால் கேரளா முதல்வர் மேலும் சில கட்டுப்பட்டுக்களை அமலப்டுத்தியுள்ளார்.தொற்று அதிகமுள்ள பகுதிகளில் அதிகளவான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளார்.அதுமட்டுமின்றி தொற்று குறைந்த பகுதிகளில் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் இயங்கவும் அனுமதி அளித்துள்ளார்.

அதனையடுத்து ஜூன் 10ம் தேதி முதல் கேரளாவில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளார்.அத்தோடு 50% தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி தந்துள்ளார்.குறிப்பாக கேரளாவில் மலபுரம் என்ற பகுதியில் ஓர் நாளில் மட்டும் 2,500 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.அதனால் அப்பகுதியில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுற்றுவற்றநகல் கூறி வருகின்றனர்.