பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன்!! திடீரென்று வெடித்ததால் இளைஞர் படுகாயம்!!
கேரளா மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென்று வெடித்தது. இதனால் அந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ரஹ்மான். இவர் ஒப்பந்த ஊழியராக இரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே துறையில் வேலை பார்த்துக் கொண்டு வந்த ரஹ்மான் அவர்கள் முகம் கழுவுவதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த போன் திடீரென்று வெடித்தது.
இதனால் உடலில் தீ பற்றியதை அடுத்து சக ஊழியர்கள் உடலில் ஏற்பட்ட தீயை அணைத்து அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். உடலில் ஏற்பட்ட சிறு தீ காயங்களுடன் உயிர் பிழைத்த இளைஞர் ரஹ்மான் அவர்கள் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.