பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது..!!

by Vijay
0 comments
DMK councilor arrested for kicking female VAO in stomach..!!

பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது..!!

விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த கூடலூர் கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடியில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் அன்று பணியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி என்பவர் இரவு உணவு வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி நான் திமுகவினருக்காக வாங்கிய உணவை எப்படி அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கலாம் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

உண்மையில் சாந்தி மற்றும் ராஜிவ்காந்தி இருவரும் ஒரே கடையில் உணவு வாங்கியுள்ளனர். இது தெரியாத ராஜிவ்காந்தி தான் வாங்கி வந்த உணவை சாந்தி எடுத்து கொடுத்ததாக கூறி அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது. பின் இரவில் மீண்டும் முழு போதையில் வந்த ராஜிவ்காந்தி கிராம நிர்வாக அலுவலர் சாந்தியிடம் பிரச்சனை செய்துள்ளார்.

அப்போது ஒருபடி மேலே சென்ற ராஜிவ்காந்தி சாந்தியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்து அவரின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். தொடர்ந்து ராஜிவ்காந்தி சரமாரியாக தாக்கியதில் வலியால் துடித்த சாந்தியை மீட்டு அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து கிராம மக்கள் மற்றும் விஏஓ சாந்தி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் ராஜிவ் காந்தி கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், உணவு காரணமாக ராஜிவ்காந்தி விஏஓ-வை தாக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தேர்தல் பிரச்சாரத்தின்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த முன்பகை காரணமாகவே ராஜிவ்காந்தி சாந்தியை சரமாரியாக தாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

About Us

We’re a media company. We promise to tell you what’s new in the parts of modern life that matter. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Sed consequat, leo eget bibendum sodales, augue velit.