மது பழக்கத்தை மறக்க வேண்டுமா? மகா குடிகாரர்கள் கூட இதை குடித்தால் திருந்தி விடுவார்கள்..!!

0
407
ways to stop drinking in tamil

Ways to stop drinking in tamil: தற்போது பல குடும்பங்கள் கஷ்டப்படுவதற்கு காரணம் இந்த மதுப்பழக்கம் தான். சிலர் கூறி கேள்விப்பட்டிருப்போம் நல்ல இருந்த மனுஷன் தான் குடிச்சி குடிச்சி இப்படி ஆகிட்டாரு என கூறி கேட்டிருப்போம். மதுப்பழக்கம் ஒருவருக்கு பழக்கமாவிட்டது என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பது அவரை மட்டும் அது பாதிக்காது. அந்த குடும்பத்தை பாதிக்கிறது. இதனால் அவரின் மனைவி, குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இது எல்லாம் அந்த நபருக்கு தெரிந்தும் ஆனால் அவரால் அந்த குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாமல் இருப்பார்.

ஒரு குடிப்பழக்கம் உள்ள நபர் திருந்த வேண்டும் என்றால் முதலில் அவர் மனதளவில் நினைக்க வேண்டும். நம்மால் நம் குடும்பம் இந்த நிலைமையில் இருக்கிறது. இந்த மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என நினைக்க வேண்டும். அவர் குடிக்காமல் இருக்கும் போது இவ்வாறாக நினைக்கலாம். ஆனால் அடுத்த நிமிடம் அந்த மதுவை பார்த்தால் அவரையும் மீறி அவர்கள் குடித்துவிடுகிறார்.

சிலர் கஷ்டங்களை மறக்க குடிக்கிறோம் என கூறுவார்கள். கஷ்டங்களை மறக்க  மதுவை தான் குடிக்க வேண்டும் என்றால், இந்த உலகத்தில் அனைவரும் குடிக்க தான் வேண்டும். பல காரணங்களை கூறி நாம் மதுவை குடிக்கலாம். ஆனால் இந்த பழக்கத்தை நிறுத்த நமக்கு இருக்கும் ஒரு காரணம் என்றால் அது நம் குடும்பம் தான். சரி அவர்களால் இதை செய்ய முடியவில்லை என்றால், அடுத்ததாக அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் அதற்கான முயற்ச்சியை எடுக்க வேண்டும்.

குடிப்பழக்கத்தை உடனடியாக மாற்ற முடியாது என்றாலும், சில மருத்துவத்தால் அவர்களை சிறிது நாட்களில் மாற்றிவிடலாம். தினமும் மது குடிப்பது போல, சில மருந்துகளை நாம் அவர்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ கொடுப்பதன் மூலம் (how to stop drinking alcohol home remedies in tamil) இதனை மாற்றி விடலாம்.

தேவையான பொருட்கள்

  • வில்வ இலை – தேவையான அளவு
  • தண்ணீர் – 300 மிலி

இந்த வில்வ இலையை பறித்து வந்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாட்டு மருந்துக்கடையில் இந்த வில்வ பொடியை வாங்கி வந்து பயன்படுத்தலாம்.

ஒரு பாத்திரத்தில் 300மிலி தண்ணீரில் 1 டேபுள் ஸ்பூன் வில்வ பொடியை போட்டு அந்த நீர் 150மிலி வரும் வரை நன்றாக சுண்ட கொதிக்க விடவும். பிறகு வெதுவெதுப்பாக உள்ள போது இதனை அவர்களை குடிக்க வைக்க வேண்டும். இவ்வாறு வெறும் வயிற்றில் காலையில் தொடர்ந்து கொடுக்கவும்.

இதனால் அவர்கள் மது அருந்தினால் சிறிது நாட்களிலேயே அவர்களுக்கு மது அருந்திய பிறகு வாந்தி வர ஆரம்பிக்கும். இவ்வாறாக அவர் வில்வ பொடி தண்ணீரை அருந்தவும், மது குடிக்கும் போது எல்லாம் அவர்களுக்கு வெறுப்பு வரும், அதனையும் மீறி அவர்கள் குடித்தால் வயிற்றில் ஒவ்வாமை ஏற்பட்டு அடுத்த நிமிடமே வாந்தி எடுப்பார்கள். இதனால் குடி மீது வெறுப்பு வந்துவிடும்.

தேவையான பொருட்கள்

  • ஏலக்காய் விதைகள் – 1ஸ்பூன்
  • எலுமிச்சை விதைகள் – 1ஸ்பூன்

அவர்கள் தினமும் சாப்பிடும் உணவில் அவர்களுக்கு இந்த விதைகளை சாப்பிட வைத்தோமானால் சிறிது நாட்களில் மது குடித்தால் அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளாது. இதனை தொடர்ந்து சில நாட்கள் செய்து வர மாற்றம் தெரியும்.

மேலும் படிக்க: Manjanathi Pazham: ஓ.. இதுதான் அந்த மஞ்சணத்தி கட்டையா? இந்த பழம் கிடைச்ச மிஸ் பண்ணிடாதீங்க..!!