காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என நேற்று லக்சர் இ தொய்வா துணைத் தலைவன் சைபுல்லா கசூரி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து லக்சர் இ தொய்பா துணைத் தலைவன் தெரிவித்திருப்பதாவது :-
காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் பாகிஸ்தானில் அமைதியை குறைக்க வேறு யாரோ முயற்சி செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகள் இந்தியாவை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டாம் எனவும் உண்மைக்கு துணையாக உலக நாடுகள் நின்றால் போதும் என்றும் தெரிவித்ததோடு இந்த சம்பவத்தில் இந்தியா நாடகம் ஆடுகிறது என குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் இருக்கக்கூடிய அந்த பகுதியில் இந்தியர்களை தவிர வேறு யாரும் இல்லை என்றும் இந்த தாக்குதலை அவர்களை செய்து கொண்டார்கள் என்றும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு அல்லது எந்த அமைப்புகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்திருப்பது அனைவரிடையயும் பல விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கூறுகையில், திவேதியை அவருடைய மனைவி முன்பு எப்படி கொன்றார்களோ அதே போல் உன்னுடைய நெற்றியிலும் இந்தியா புல்லட்டை வைக்கும் என்றும் இந்த பயங்கரவாத நிகழ்விற்கு இந்தியா கட்டாயமாக பழிவாங்கிய தீரும் என்றும் தெரிவித்ததோடு இந்தியாவிடம் நாம் கிடைத்தால் நம்முடைய நிலை என்ன ஆவது என பயந்தே இதுபோன்ற நீலி கண்ணீரை தீவிரவாதி வடிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.