திருமணமான பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து இந்த பொருட்களை தெரியாமலும் எடுத்து வராதீங்க!!

Photo of author

By Divya

திருமணமான பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து இந்த பொருட்களை தெரியாமலும் எடுத்து வராதீங்க!!

Divya

பெண்கள் தங்கள் திருமணத்திற்கு பல்வேறு சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.தங்கள் தாய்வீடு மற்றும் புகுந்த வீட்டிற்கு பிரச்சனை ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும்.பெண்கள் தங்கள் தாய்வீட்டில் இருந்து
சில பொருட்களை எடுத்து வந்தால் நிச்சயம் இருவீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும்.

அந்தவகையில் பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாத பொருட்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1.பிறந்த வீட்டில் இருந்து புகுந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்து வரக் கூடாது.அதாவது கத்தி,ஊசி,அரிவாள் போன்ற கூர்மையான பொருட்களை எடுத்து வரக் கூடாது.

2.துடைப்பம்,முறம் போன்ற வீட்டை தூய்மை படுத்த பயன்படுத்தும் பொருட்களை தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது.

3.எண்ணெய்,கல் உப்பு ஆகிய பொருட்களை பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது.

4.பூஜை அறையில் வைத்துள்ள கடவுள் புகைப்படம்,குத்துவிளக்கு,பூஜை பொருட்கள் ஆகியவற்றை தெரியாமலும் எடுத்து வந்துவிடாதீர்.

5.அதேபோல் காய்கறிகளில் முருங்கை காய்,முருங்கை இலை,பாகற்காய்,கறிவேப்பிலை போன்றவற்றை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.

6.தாய்வீட்டில் அரிசி அளக்க பயன்படுத்தும் படி மற்றும் அரிசி புடைக்க பயன்படுத்தும் முறத்தை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.

7.தாய்வீட்டில் சமைத்த அசைவ உணவுகள் மற்றும் எண்ணெய் பலகாரங்களை புகுந்த வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.

8.பிறந்த வீட்டில் இருந்து அரிசி,கோலமாவு போன்றவற்றை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் பிறந்த வீட்டில் பயன்படுத்திய சமையல் பாத்திரங்களை புகுந்த வீட்டிற்கு எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.