இது தெரியுமா? இந்த ஒரு டீ குடித்தால் தலைவலி சளி காய்ச்சல் அப்போவே குறைஞ்சிடும்!!

Photo of author

By Divya

இது தெரியுமா? இந்த ஒரு டீ குடித்தால் தலைவலி சளி காய்ச்சல் அப்போவே குறைஞ்சிடும்!!

Divya

சில நேரம் அதீத ஒற்றைத் தலைவலி பாதிப்பை பலரும் அனுபவிக்கின்றனர்.இந்த தலைவலியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.தலைவலி பாதிப்பில் இருந்து மீள மூலிகை பொருட்களை பயன்படுத்தி டீ செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கப்
2)ஏலக்காய் – ஒன்று
3)ஜாதிக்காய் பொடி – சிட்டிகை அளவு
4)தேயிலை தூள் – ஒரு தேக்கரண்டி
5)சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி
6)இஞ்சி – ஒரு துண்டு
7)கரு மிளகு – நான்கு
8)பட்டை – ஒரு துண்டு
9)புதினா இலை – நான்கு
10)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் உரலில் ஒரு ஏலக்காய்,ஒரு பீஸ் பட்டை,ஒரு பீஸ் இஞ்சி,நான்கு கருப்பு மிளகு ஆகியவற்றை போட்டு கொரகொரப்பான பக்குவத்திற்கு இடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் பால் ஊற்ற வேண்டும்.ஒரு நிமிடம் கழித்து ஒரு தேக்கரண்டி தேயிலை தூள்,சிட்டிகை அளவு ஜாதிக்காய் தூள் போட வேண்டும்.

பிறகு அரைத்த கலவையை அதில் கொட்ட வேண்டும்.அடுத்து புதினா இலை மற்றும் வெள்ளை சர்க்கரை இரண்டு தேக்கரண்டி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

குறைவான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு மசாலா டீ கொதிக்க வைத்து வடித்து பருகினால் சுவையாக இருக்கும்.இதில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகை பொருட்கள் தலைவலி சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்தக் கூடியவையாகும்.

தலைவலி சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்து கொள்ள இந்த மசாலா பொருட்களை கொண்டு டீ போட்டு குடிக்கலாம்.

அதேபோல் கிராம்பு தேநீர்,செம்பருத்தி தேநீர்,பெருஞ்சீரக தேநீர்,புதினா தேநீர்,மஞ்சள் பால்,க்ரீன் டீ,சாமந்தி தேநீர் போன்றவை தலைவலி,ஒற்றைத் தலைவலி பாதிப்பை முழுமையாக குணப்படுத்தும்.