சாகும் வரை சர்க்கரை நோயே வராது.. இந்த ஒரு காயில் ஜூஸ் செய்து குடித்தால்!!

Photo of author

By Divya

சாகும் வரை சர்க்கரை நோயே வராது.. இந்த ஒரு காயில் ஜூஸ் செய்து குடித்தால்!!

Divya

முதுமை காலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய்.இந்த நோய் தற்பொழுது இளமை பருவத்தினருக்கு அதிகமாக ஏற்படுகிறது.இந்த நோய் சாகும் வரை முழுமையாக குணமாகாது என்பதால் இதனை கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.அதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு பிடித்த உணவுகளை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.குறிப்பாக இனிப்பு உணவுகளை சாப்பிடுவதில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

நீரிழிவு நோய் அறிகுறிகள்:-

**அதீத உடல் சோர்வு
**கண் பார்வை மங்குதல்
**அடிக்கடி சிறுநீர் கழித்தல்
**எடை இழப்பு
**அதிக தாகம் எடுத்தல்

நீரிழிவு நோய் வர காரணங்கள்:-

**குடும்ப வரலாறு
**வயது முதுமை
**உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறை
**கணைய நோய்
**மோசமான உணவுப் பழக்கம்
**உடல் பருமன்

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஐந்து பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

2.பிறகு நெல்லிகாய் விதையை மட்டும் தூக்கி போட்டுவிட்டு சதை பற்றை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.இதற்கு அடுத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீரை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

3.இந்த நெல்லிக்காயை ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த நெல்லிக்காய் ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

4.நெல்லிக்காய் ஜூஸை தினமும் ஒரு கிளாஸ் அளவிற்கு பருகி வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா காய் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கொய்யாக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்ஸர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

2.இந்த கொய்யாக்காய் ஜூஸை பருகி வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.இந்த கொய்யாக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.