India: இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போர் மோதல் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதன் தீவிரமானது அதிகரித்துள்ளது. இதன் உச்சகட்டமாக ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென ஈரானும் தொடர்ந்து ட்ரோன், ஏவுகணை மூலம் இஸ்ரேலை தாக்குகிறது. இருவருக்குமிடையே தினசரி மோதல் போக்கானது அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல இஸ்ரேலுக்கு அமெரிக்கா பக்க பலமான ஆதரவையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு இஸ்ரேல் நாடானது நேற்று புகைப்படத்துடன் கூடிய ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஈரான், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினால் எவ்வளவு தூரம் செல்லும் என்பது குறித்து விவரத்திருந்தது. அந்த புகைப்படத்தில் இந்தியா உள்ள இடத்தில் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் உடன் இணைந்தது போல் காட்டியுள்ளனர். இதைப் பார்த்த இந்தியர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது ரீதியாக தற்போது இஸ்ரேல் வாய் திறந்து உள்ளது.
நாங்கள் வெளியிட்ட மேப்பில் சில தவறுகள் உள்ளது துல்லியமான எல்லைகளை கூறுவதில் தவறு நடந்து விட்டது. இதனால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் எனக் கூறியுள்ளனர். இஸ்ரேலின் மன்னிப்பு அறிவிப்பு பிறகு தான் இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதை நிறுத்தியுள்ளனர்.