இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

0
80

தமிழ்நாட்டின் நோய்த்தொற்றை இரண்டாவது அறையில் மிகவும் தீவிரமான பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு பலன் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் இந்த நோய் தொற்று பரவ கட்டுக்குள் இருப்பதாக கருதுகிறார்கள். ஆனாலும் நோய்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்கள் எந்தவிதமான அவஸ்தையையும் பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டது.

அதன்படி முதல்கட்டமாக எல்லா அரிசி கார்டுதாரர்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில்,, தற்சமயம் இரண்டாவது கட்டமாக 2000 ரூபாய் பணம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நோய்த் தொற்று பரவ காரணமாக, பலியாகும் முன் களப் பணியாளர்களுக்கு நிவாரணத்தொகை ஆலயத்தில் நிலையான மாத ஊதியம் இல்லாமல் பணியாற்றி வரும் பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நான்காயிரம் ரூபாய் 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்குவதற்கு ஆணையிட்டிருக்கிறார்.

ஆகவே தமிழக அரசு பேருந்துகளில் இதற்கு முன்னரே மகளிர் பயணம் செய்ய இலவச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல தங்களுக்கும் இலவச பயண திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு உரிய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த முதல் அமைச்சர் ஸ்டாலின் திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து திருநங்கைகளின் இன்னொரு கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி வழங்கியிருக்கிறார். அதாவது ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் நோய்த்தொற்று நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தர். தமிழ்நாட்டில் மொத்தம் 11 ஆயிரத்து 449 திருநங்கைகள் இருக்கின்ற சூழலில் முதல் கட்டமாக ரேஷன் அட்டை வைத்திருக்கும் 2,956 திருநங்கைகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கு தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்படுகிறது.