சிறுவன் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை! கேம் விளையாடியதால் ஏற்பட்ட வினை!

0
100

சிறுவன் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை! கேம் விளையாடியதால் ஏற்பட்ட வினை!

குஜராத்தில் சூரத் மாவட்டத்தில் 17 வயது சிறுவன் தனது தந்தையை மொபைலில் கேம்ஸ் விளையாடியதற்காக திட்டியதால் அவரது கழுத்தை நெரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுவனை தடுத்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புதன்கிழமை ஒரு ஆண் ஒரு பெண்ணை சிகிச்சைக்காக நியூ சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.மருத்துவர் நோயாளியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதனை வியாழக்கிழமை போலீசார் தெரிவித்தனர்.பின்னர் மருத்துவர்கள் இச்சாப்பூர் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.இதனால் அங்கிருந்து போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

அந்த நபர் குளியலறையின் தரையில் விழுந்து காயமடைந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.வியாழக்கிழமை நியூ சிவில் மருத்துவமனையில் தடய அறிவியல் துறைகளின் டாக்டர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.பின்னர் தனது தந்தையை கொன்றதாக ஒப்புக் கொண்ட சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் வியாழக்கிழமை சிறுவனின் அறிக்கையை எடுத்து சிறார் கண்காணிப்பு வீட்டிற்கு அனுப்பினர்.அந்த சிறுவர் அடிக்கடி மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவார்.புதன்கிழமை பிற்பகலில் அவரது தந்தை அவரைத் திட்டியபோது அது தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

இதைத் தொடர்ந்து சிறுவன் தனது தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றான் என்று இச்சாப்பூர் காவல் ஆய்வாளர் என்எஸ் தேசாய் தெரிவித்தார்.இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சிறுவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.