இயற்கையின் காரணத்தால் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து?

0
123
A bus that fell into a ditch due to nature?
A bus that fell into a ditch due to nature?

இயற்கையின் காரணத்தால் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து?

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு லாரியால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்தது.

இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக  காயங்களின்றி உயிர் தப்பினர்.ஒரு சில பயணிகளுக்கு மட்டும்  சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் அங்குள்ள சாலையோரத்தில் மரக்கிளைகள் தாழ்வாக வளர்ந்துள்ளதால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சரக்கு லாரி சாலையில் வலது புறம் கொஞ்சம் தள்ளி வந்ததாகவும் அதனால் எதிரே வந்த அரசு பேருந்து ஓட்டுனர்  பிரேக் பிடித்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இச்சாலையில் அடிக்கடி இது போன்று விபத்து ஏற்படுவதாகவும்  புகார் தெரிவித்தனர். இது போன்ற விபரீதம் ஏற்படாத வகையில் சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள மரக்கிளைகளை சற்று அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Parthipan K