பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!!

0
154
#image_title

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!!

கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இரண்டரை லிட்டர் பெட்ரோலுடன் பெங்களூரு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் ரயிலில் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோட்டயத்தைச் சேர்ந்த சேவியர் வர்கீஸை பெங்களூரில் இருந்து தனது பைக்கை பார்சல் சர்வீஸ் மூலம் கோட்டயத்திற்கு அனுப்ப கொண்டு சென்ற போது பார்சல் அனுப்பும் போது வாகனத்தில் பெட்ரோல் இருக்கக்கூடாது என்பதால் அவர் பாட்டிலில் பெட்ரோலை பிடித்து தனது பையில் வைத்து ரயில் பயணம் செய்துள்ளார்.

கோட்டயத்தில் இறங்க வேஎண்டிய சேவியர் திருச்சூரில் இறங்கியுள்ளார். நடைமேடையில் சென்றபோது ஆர்.பி.எப். வீரர்கள் அந்த இளைஞரை கைது செய்தனர்.

author avatar
Savitha