ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

0
86
A youth and two boys staged an incident at the bus station! Police registered a case!
A youth and two boys staged an incident at the bus station! Police registered a case!

ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் எரல் அருகே உள்ள இடையற்காடு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. அவரது மகன் அரியாநாயகம் (31). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று காலை அரியாநாயகம்  பேருந்து நிலையம்   அருகே நின்று கொண்டிருந்தார்.

மேலும் அவர் நண்பரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது அரியநாயகம் சத்தம் போட்டவுடன்  அக்கம் பக்கத்தினர் விரைந்து  சென்று  அவர்களை மூவரையும் வளைத்து பிடித்தனர்.

மேலும் அவர்களை   தெர்மல் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களின் மீது போலீசார் விசாரணை நடத்தினார்கள்  அப்போது அவர்கள் தூத்துக்குடி தினேஷ் புறத்தைச் சேர்ந்த செட்டி பெருமாள் மகன் முனீஸ்வரன்  (25) மற்றும் 2 இளஞ்சிறார்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.  மேலும் இதனையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K