மயில் மோதியதால் மரணம்! புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!

0
83
Accident caused by peacock for newly married couples
Accident caused by peacock for newly married couples

மயில் மோதியதால் மரணம்! புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!

கேரளாவில் புதுமண தம்பதிகள் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது மயில் ஒன்று சாலையில் பறந்து வந்து மேலே விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பைக்கை ஓட்டிச்சென்ற புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.கேரளா மாநிலம் திருச்சூர் புன்னயூர்குளம் பீடிகப்பறம்பைச் சேர்ந்தவர் பிரமோஸ்.அவருக்கு வயது 34.அவர் திருச்சூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.இவருக்கு நான்கு மாதத்திற்கு முன்னர் வீணா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இவருக்கு வயது 26.வீணாவும் தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் புதுமணத் தம்பதிகள் பைக்கில் பயணம் செய்துள்ளனர்.அவர்கள் இருவரும் அய்யந்தோள் புழய்க்கல் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது மயில் ஒன்று எதிர்பாராத விதமாக அந்த சாலையின் வழியே பறந்து வந்தது.பறந்து வந்த மயிலானது பிரமோஸ் நெஞ்சில் வேகமாக மோதியது.இதனால் பிரமோஸ் நிலைதடுமாறி விடவே அவரின் பைக்கின் வேகமும் அதிகரித்தது.வேகமாக சென்ற பைக்கனது இன்னொரு பைக்கின் மீது மோதியது.

அந்த பைக்கில் பயணம் செய்த தனேஷ் என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அவருக்கு வயது 37.பிரமோஸ் அந்த பைக்கின் மீது மோதிய பிறகு பக்கத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டார்.அவரது மனைவியும் தூக்கி வீசப்பட்டார்.இந்த விபத்தில் பிரமோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் அந்த மயிலும் உயிரிழந்தது.வீணாவும் தனேஷும் படுகாயம் அடைந்தனர்.அக்கம்பக்கத்தினர் இவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணம் அடைந்த பிரமோஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் இந்த விபத்து குறித்து திருச்சூர் வெஸ்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மயிலின் உடலை வனத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் பிரமோஸ் மரணம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K