ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

0
132

ஆம்புலன்ஸ் கோர விபத்து:கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

சிவகங்கையில் நெஞ்சை உருக்கும் விபத்து 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் பலி. மேலும் மூன்று பேர் படுகாயம்.

சிவகங்கை இளையான்குடி பகுதியில் சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் அவர்களது உறவினர் பெண் திருச்செல்வி சென்றுள்ளார்.

வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் நிவேதாவின் உறவு பெண் திருச்செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் உயிரிழந்த நிவேதா மற்றும் அவரது தாயாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது தாயார் விபத்தில் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.