அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!!

0
166
#image_title

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!!

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படம் பெருமளவில் தோல்வியை தழுவியது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் தனது அடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்னும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனுஷ் தற்போது ‘ராயன்’ என்னும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து தனது அக்கா மகனை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்னும் படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியான ஒன்று தான்.

இதற்கிடையே நடிகர் தனுஷின் 51வது திரைப்படமான ‘குபேரன்’ திரைப்படம் தெலுங்கு இயக்குனரான கம்முலா இயக்கி வருகிறார், அமிகோஸ் கிரியேஷன்ஸ் மற்றும் வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகிறார்களாம்.

நாகர்ஜூனாவுடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்

இப்படத்தில் தனுஷ் ஒரு பிச்சைக்காரராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா போலீஸ் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்து வருகிறாராம். இவர்கள் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் படத்தினை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் என்னும் எதிர்பார்ப்பு தற்போதே எழுகிறது. ராஷ்மிகா மந்தனாவும் இப்படத்தில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கோவாவில் நடந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில் இவ்வருடத்தின் இறுதிக்குள் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.