நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்!

0
80

சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்தது. இன்னும் அவரது தற்கொலை நிமிடங்களை யாராலும் மறக்க முடியாது. இது கொலையா தற்கொலையா என்ற வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கத்தால் இவருக்கு படவாய்ப்புகள் பறிக்கப்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. போதை பழக்கம் ஒரு பக்கம் காதல் தோல்வி என ஒருபக்கம் எனில் இவரது தற்கொலைக்கு காரணம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாற்றை NYAY: The Justice என்ற தலைப்பில் திரை படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை திலீம் குலாட்டி இயக்குனர் இயக்கி உள்ளார். இதில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஆக ஜூபர் கான் நடித்துள்ளார். அவரது காதலியான ரியா சக்கரவர்த்தியாக ஸ்ரேயா சுக்லா நடித்துள்ளார். இவர்கள் தவிர பலர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.

 

விகாஷ் புரொடக்ஷன் சரோகி, ரகுல் சர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 11ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

சுஷாந்த் சிங்கின் தந்தை இப்படம் வெளிவருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது சுஷாந்த்தின் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வெளிவந்தால் வழக்கின் போக்கை மாற்றும் என குறிப்பிட்டிருக்கிறார்.

 

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சுஷாந்த்தின் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இந்த படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

 

 

 

 

author avatar
Kowsalya