அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் காலமானார்! அதிர்ச்சியில் தலைமை!

0
86

கோயம்புத்தூரை அதிமுககோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராஜு உடல்நல குறைவு காரணமாக காலமானதாக சற்றுமுன் தகவல் கிடைத்திருக்கிறது.

கோயம்புத்தூரை சார்ந்த கே டிவி ராஜ் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோயம்புத்தூரில் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார் அதோடு கோயம்புத்தூர் மாவட்ட ஒன்றிய தலைவர், முன்னாள் தமிழ்நாடு பஞ்சாலை அமைப்பின் தலைவர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர், போன்ற பல பொறுப்புகளை வகித்தவர் கே.பி.ராஜு

இந்த சூழலில் சிறுநீரக கோளாறு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்திருக்கிறார். அவருடைய மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், போன்றவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.