பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் :?

0
77

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை நேரில் பார்க்க சென்ற போது நிர்வாணமாக்கப்பட்டு,அடித்துத் துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த வாலிபர் வினோத்குமார் வெட் டிசைனராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இவருக்கு பேஸ்புக் மூலம் நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பெண் அவ்வப்போது ஆபாச படங்களை அனுப்பி வைக்குமாறு சபலத்தை தூண்டி விட்டுள்ளார் .இதனை அடுத்து சாபத்திற்கு ஆளான விக்னேஷ் குமார் நிஷாவுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளார். இந்நிலையில் வினோத்குமாரை நேரில் சந்திக்க நிஷா ஒரு இடத்திற்கு வினோத்குமாரை வர சொன்னார்.

இதனையடுத்து பண்ருட்டியில் இருந்து திருச்சி செல்லும் வழியில் வினோத்குமார் நிஷா கூறிய இடத்திற்கு சென்று அவரை நேரில் பார்த்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து ஏடிஎம் கார்டு, ஸ்மார்ட்போன் ,உள்ளிட்டவை பறித்துக் கொண்டு அவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர்.

இதனையடுத்து நண்பர்களிடமிருந்து துணி வரவழைத்து அணிந்துகொண்டு, பின்னர் வினோத்குமார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நிஷா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர.

ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

author avatar
Parthipan K